Wednesday, 28 December 2011

முத்திரை.

முத்திரை.
இசை, நடனம், ஓவியம்
ஆகிய மூன்றினையும் ஒன்றிணைத்து
முதன்முதலாய் ஒரு அரங்கேற்றம்
காகித மேடையில் நர்த்தனமாடுகின்றன
விரல்கள்...
பாரதி என்றொரு காவியம் ...
ஓவியமாய்ப் பிறக்கிறது!
இது ஓவியக் கலையில் புதியதொரு முயற்சி
பரதத்தில் கைகள் பிடிப்பது முத்திரை
இசை ஓவியம்தனில்
 உம் விரல்கள் படைத்தன தனி முத்திரை.
முத்திரை படைத்த சிற்பியே...! ஜெயராமரே...!
வாழ்க நீவிர்!


                       இது தவிலின் இசைக்கேற்றவாறு தனது கரங்களையும், விரல்களையும் நடனம் ஆடுகின்ற லாவகத்தோடு அசைத்து ஒரு சார்க்கோல் (கரித்துண்டு)கொண்டு மகா கவி பாரதி எனும் அற்புத ஓவியத்தை படைத்த சிற்பி ஜெயராமன் (பாண்டிச்சேரி பாரதியார் கவின் கலைக் கல்லூரியின் முதல்வர்)அவர்களைக் கண்டு வியந்துபோன என் உள்ளம் பாடிய கவிதை.

Sunday, 18 December 2011




நான் தீட்டிய சில இயற்கைக் காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு ...

Saturday, 17 December 2011

வெறுப்பு!




முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி 
இல்லை நீரென்றே யுரைக்கின்றீர் -தொல்லை
தருவதற்கா அண்டைமா நிலமானீர் எமக்கு 
வருகிறதே உம்மேல் வெறுப்பு!

Thursday, 15 December 2011

மழை ரோஜா

 மழை ரோஜா

 கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 
கார்மேகம் மட்டுமே கவி  பாடுகிறது!
வெண் மேகம் எதுவுமின்றி 
வெறிச்சோடிக் கிடக்கிறது வானம்! 
 கவிழ்கிறது காரிருள் !
வியப்பினிலே விரிகின்றன விழிகள்...!
முள்ளில்லா  செடியினிலே ரோஜாவொன்று 
புதியதாய்   பூக்கிறது! 
காலையிலே  பூக்கும் ரோஜா காரிருளில் பூத்திடுமோ ?
கண்ணைக் கட்டுகிறது எனக்கு!
திகைத்து   நான்  நிற்கையிலே  திடீரென தூறல் மழை 
அடடா   என்ன  இது! 
புதியதாய் பூத்த பூவதனை
புன்னகையோடு வரவேற்க 
பன்னீர் தெளிக்கிறதோ வானம் !
இரு கார் மேகக் கரம் குலுக்கி
 மின்னல்  வெட்டிச் சிரித்து 
இடி இடி எனச் சிரித்துக் கொண்டாடுகிறது  இயற்கை!
வீசும்  காற்றிலே வேகமாகத் தலை விரித்தாடுகின்றன 
குலை தாங்கிய தென்னை மரங்கள் !
அடித்திட்ட காற்றின் வேகத்தில் 
அரை நிமிட நேரம் திசை மாறிய தூறலோ 
தெளிக்கிறது சாரலாய் ...!
முகத்தில் அடித்திட்ட சாரலின் மிச்ச சொச்சங்கள் 
ரோஜா மலரில் வீற்றிருக்கும் பனித்துளி போல் 
அந்த ரோஜாவின் எழிலுருவை
 வான்மன்னன் படம் எடுக்க விழைந்தானோ!
மீண்டும் ஒரு மின்னலொளி!
வீசி மறைந்திட்ட ஒளியினிலே நான் கண்டேன் ...!
நனைந்து சிரிக்கின்ற மலரவள் யாரென்று!
சிலிர்த்துச் சிரிக்கின்ற பெண்ணவள்...
 என்னவள்தானென்று! 
...............................................................................முத்துக் குமரன் சுரேஷ் 


Friday, 18 November 2011









இவை அத்தனையும்...
 நான் வரைந்த ஓவியக் குழந்தைகள்...!
பிரசவ வலியின்றி ...
நாம் பெற்றெடுத்த முத்துக்கள்!

காலப் பெருவெளி

காலப் பெருவெளி 
உலகம் ஊமையாகிப் போனது. 
காற்றும் உறைந்தது.
மரங்கள் ஜடமாயின  
ஆதவனும் நடுவானில் அசையாமல் நின்றுவிட்டான்.
கடிகார முள் கூட நிலையாக அசையாமல் ,
காலம் கூடக் கட்டுண்டுபோனது.
அய்யோ...!
இது என்ன? பூமியும் சுற்ற வில்லை...
புவி ஈர்ப்பு விசையுமில்லை...
விசிறிஎறியப்பட்ட உயிர்கள் அத்தனையும் 
ஆகாயப் பெருவெளியில் ...
அலறல்கள் வான்முட்டிக் 
கரைகின்றன மெது மெதுவாய் ...
அதிசயமாய் இருவர்மட்டும் 
பூமியிலே தனியாக ....
அடடா...!
அது யார் ? 
நாமா?
போதும் என் கண்ணே! 
என் விழியும் உன் விழியும் 
முதன் முதலாய் சந்தித்த நொடிப் பொழுதில் 
இப்படித்தான் உணர்ந்தேன் நான்!
அன்பே....!
நம் இரு விழிகள் கலந்ததற்கே இப்படியா?
ஒருவேளை நம் ஈருடலும் ஓருயிராய் கலந்துவிட்டால்....?
இந்தப் பெரு அண்டம் முற்றிலுமே 
வெடித்தல்லவா சிதறிவிடும்..!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ...!
நாம்...
நம் காதல்...
நம் உறவு ...
நம் உணர்வு ...
இவையனைத்தும் 
காலப்பெருவெளிகள் தாண்டியும் 
விரிந்து சென்று கொண்டே...









சுவாசிகா -சமூக நல அறிவியல் முன்னேற்ற மாணவ இளைஞர் இயக்கம் ,1996 ஆம் வருடம் மே மாதம் முதல் நாள் -உழைப்பாளர் தினம் அன்று துவங்கப்பட்ட இவ்வியக்கம்,திரு  முத்துக் குமரன் அவர்களின் வழி காட்டுதலோடு, மாணவர்களுக்காக, மாணவர்களால் நடத்தப்படும் மாணவர்களின் இயக்கம் .பண்ணுருட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ மாணவியரின் உள்ளங்களில் தலைமைப் பண்புகளை ,அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதத்திலும் இளம் வயதிலேயே சேவை செய்யும் எண்ணத்தைத் தோற்றுவித்து அவர்களுக்கு சமூக சேவைகளை செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்து ,தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. 

Tuesday, 15 November 2011

விரக்தி

வான்வழங்கும் அமுதம்எல்லாம் தரைநெடுகத் தானோடி 
நான்பார்க்கக் கடலினிலே கலந்திடுதே -வீண்தானோ 
நானுனக்கு நடத்துகின்ற பாடமெல்லாம் அதுவானால் 
ஏனுனக்கு நடத்தவேண்டும் நான்?

Monday, 14 November 2011









இவை அனைத்தும் என் தூரிகை ஈன்றெடுத்த மழலைகள்..
உங்கள் கண்கள் என்னும் மடியினிலே தவழ்ந்தாட 
தவமிருக்கும் என் செல்லப்பிள்ளைகள்
உங்கள் ரசனை என்னும் பாச மழைக்காய் ஏங்கி நிற்கும் பசும் குருத்துக்கள்
பாருங்கள்...
இருகண்களால் வருடுங்கள் ... 

விருப்பம்

 விருப்பம் 
அன்பே ....
நினைவிருக்கிறதா..?
முதன்முதலில் விளையாட்டாய்
உன் விருப்பம் நீ எழுத 
என் விருப்பம் நான் எழுத
பரஸ்பரம் கேட்டோமே.....!
எழுதியபின்
 தாள் மாற்றி படித்தபோதோ
உன் தாளில் என் விருப்பம்...
என் தாளில் உன் விருப்பம் ...!
அன்றே உணர்ந்தேன் நான்.
.உன் உடலில் என் மனமும் 
 என் உடலில் உன் மனமும் !

Sunday, 13 November 2011

ஏன்....?

                ஏன்....?  
 மனம் வெறுமை ஆகிறதே
        மழை விட்ட மேகம்போல் 
தினம் காணும் கனவெல்லாம் 
       விடியலிலே மறைவது போல் 
வனம்தனிலே பாதைதனை 
        தொலைத்துவிட்ட மனிதன் போல் 
தனம் முழுதும் பறிகொடுத்த 
         செல்வந்தன் மனமதுபோல் ...!
ஏன்....?

Sunday, 6 November 2011

படி

ஆங்கிலம் கணிதம் அறிவியல் இம்மூன்றும் 
தங்குதடை இல்லாமல் கற்றுவிடு -மாங்குயிலே  
அப்போது தான்கிடைக்கும் படித்திடவே இடமுனக்கு 
தப்பாது கல்லூரி யில் .

Thursday, 3 November 2011

வெண்பா

சொக்கவைத்து மதிமயக்கும் சொந்தப்பெயர் மறக்கடிக்கும் 
செக்குமாடாய்ச் சுற்றிடுமே என்மனது -சக்கரையே 
கமலமலர்க் கண்ணசைத்து கனியதரம் துடிதுடிக்க
எமதுபெயர் நீயுரைக்கும் போது. 

இது வெண்பா வகைக்  கவிதை

கவிதை!

  கவிதை!

மனமென்னும் விசைத் தறியில்

     வார்த்தை ஜாலமேன்னும்
            வண்ணமிகு நூல்கொண்டு 
                  நயமெனும் ஜரிகை சேர்த்து 
                        கவிஞன் நெய்யும் 
                              கைத்தறிச் சேலை...
                                            கவிதை!

Wednesday, 2 November 2011

தொலைகாட்சி

தேவையிலாத் திரைப்படமும் தெளிவிலா  நீள்தொடரும் 
சுவையில்லா நிகழ்ச்சிகளும் காட்டிடுமே- அவையொதுக்கு
இலையென்றால் பொன்னான நேரத்தைத் தின்றிடுமே 
தொலைகாட்சி என்கின்ற பேய்.


இது வெண்பா வகை .

Sunday, 30 October 2011


குழலூதி மயக்கும்...

 ராதா சமேத கிருஷ்ணன் !

Saturday, 29 October 2011

என்னதான் வண்ணங்களை வாரியிறைத்து ஓவியம் தீட்டினாலும் பென்சில் ஓவியத்தின்முன் பொலிவிழந்து நிறம் மங்கி விடுகின்றன.பல நேரங்களில் பென்சிலிடம் தூரிகை தோற்றுத்தான் போகிறது!இந்த ஓவியம் போஸ்டர் கலர் பேப்பரில் அப்சரா 2B பென்சில் கொண்டு வரையப்பட்டது !


இந்த ஹனுமானின் சிற்பமும்கூட மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே எடுக்கப்பட்டதுதான்.அற்புதமான வேலைப்பாடு கொண்ட நம் பழங்கால புதையல்களுக்கும் பண்டைத் தமிழர்களின் கலைத் திறமைக்கும் ஆதாரமாய் விளங்கும் இது போன்ற சிற்ப வேலைப்பாடுகளின் பெருமையை உலகம் மென்மேலும் அறியச் செய்வோம்.

Friday, 28 October 2011

மழை

என் வீட்டு சன்னலில் 
நான் பார்க்கும் காட்சிகளை
கண்காணாமல் மறைத்திட 
இயற்கை விரித்திட்ட 
நீர் திரை...
மழை

மழை !

வானத் தாயின்
மெகா தனம் சுரக்கும் 
பூமிக் குழந்தைக்கான 
தாய்ப் பாலூற்று ..
மழை !

மழை

கார்மேகப் பஞ்சுகொண்டு 
காற்று ராட்டை 
நூற்கும் நீரிழை ...
மழை !


Thursday, 27 October 2011

புழுக்கம

   புழுக்கம் 


கண்ணுக்கு எட்டிய தூரம்வரையிலும் 
கார்மேகம் மட்டுமே கவி பாடுகிறது.
கவிதை வரிகளாய் மழையின் தூறல்கள்.
அடிக்கின்ற காற்றிலே 
திசை மாறிய தூறல் 
சாரலாய் வீசுகிறது
சிலிர்க்க வைக்கும் ஈரக்காற்றில் 
சிங்காரமாய்த் தலையசைக்கின்றன 
நீரையுண்ட விருட்சங்கள்.
இலைகள் குடித்த  மிச்ச எச்சிலை
இன்பமாக சுவைக்கின்றன 
மரத்தடிப் புற்கள்.
தான் உண்ட நீர் போக 
சேர்த்துத் தேக்குகிறது பூமி
சிறு சிறு குட்டைகளாய்.
உற்சாகமாய் சிறகுகள் விரித்து 
உடலை நனைத்து ,
நீரைக் குடித்து, 
சிலிர்த்து,உதறி ,மீண்டும் குளித்து
கும்மாளமிடும் காக்கைக் கூட்டம்
குளியல் தந்த உற்சாகத்தில்
கா கா எனக் கரைந்து 
பறந்து செல்கிறது விரைந்து !
வானம் கவிழ்ந்துவிட்டதன் காரணத்தால் 
பூமியெங்கும் அரை வெளிச்சம்...
இருட்டிற்குச் சாம்பல் வண்ணமாய் ...!
உடலை வருடி 
மெல்ல வீசுகிறது ஊதற்காற்று.
பூமியெங்கும் இதமான குளிர்.
வீசும் காற்றில் குளிர்.
மண்ணில் குளிர்.
மழைச் சாரலில் குளிர்.
சாரல் பட்டுத் தெரித்ததால்
உடல் எங்கும் குளிர்.
சாரல் நிறைந்த ஈரக்காற்றை 
உள்ளுககாய் சுவாசித்து,
உள்நிரப்பியதால் நுரையீரலில் குளிர்.
ஒவ்வொரு செல்லிலும் , உயிரிலும் குளிர்.
உன்னைச் சுற்றி 
எல்லாம் குளிர்ந்தும்கூட ,
என் உள்ளமே ...
உனக்குமட்டும் 
வியர்த்து வடிகிறதே ...!
ஏன்...?


                                                       ....மாணவ நண்பன்.

Saturday, 8 October 2011

கமலமலரின் அழைப்பு

கமலமலரின் அழைப்பு 

பாரினில் நீயின்றேல் 
        
        படுத்துவிடும் உயிர்களெல்லாம்

பட்டினிப்போர் மூண்டுவிடும்

        பகலவனே வந்துவிடு!

கடலுமுனைக் காணாது 

       கதறிவிடும் பரிதவித்தே!

காத்திருக்க வைக்காதே

      கதிரவனே வந்துவிடு!

இரவரக்கன் பிடியினிலே 
     
     இதழ்கூம்பி நிற்கின்றேன்;

இப்பொழுதே இக்கணமே 

      இரவியோனே வந்துவிடு!

ஆட்டமிட்ட காதலனும் 

    அடங்கிவிட்டான் என்னுள்ளே!

ஆங்கிவனை சிறைமீட்க 
     
     ஆதித்யா வந்துவிடு!

சுட்டெரிக்கும் வெயில்வேண்டாம் 

      சூடான சுகம்வேண்டும் !

சுடர்முகத்துச் சூத்ரதாரி 

       சூரியனே வந்துவிடு !

                        மாணவ நண்பன் .
                                                           
    

                          





           

Friday, 7 October 2011

காலை வணக்கம்

காலை வணக்கம்
இன்று அதிகாலை 
என்வீட்டுத் தோட்டத்தில் 
பூத்திட்ட புத்தம் புது ரோஜா மலரொன்று
புது மனம் மாறாமல்  
அனைத்து  நண்பர்களுக்கும்
 காலை வணக்கத்தை
தெரிவித்துக் கொள்கின்றது !
                            

Monday, 3 October 2011

வீக்கம்

வீக்கம்
கதவிடுக்கில் கை வைத்து
விரல்கள்    நசுங்கி
 வீரென்று  அலறினாய்
ஆனால் வீங்கிப்போனது...
எனது விரல்கள்!
உதிரம் வழிந்தது
என் விழிகளில்...
வலியுணர்வு என் மனதில்
காரணம் தெரியாமல்
தவித்தேன் நான்!
ஆனால் நீ ,
விழி மலர்ந்து 
எனைப் பார்த்தாய்!
நான் உணர்ந்தேன் அதன்பின்னர் ...
உன்னுடலில் என்னிருப்பும் 
என்னுடலில் உன்னிருப்பும் ! 

மேகக் கூட்டங்கள்

மேகக் கூட்டங்கள்

வானம் எனும் காகிதத்தில்
வினாடிக்கு வினாடி 
உருவம் மாறும் நவீன ஓவியங்கள்.... 
மேகக் கூட்டங்கள்! 

மின்மினிப் பூச்சி

மின்மினிப் பூச்சி 

 பின்புறத்தில்
 விளக்கினைப் பிடித்துக்கொண்டு 
 எதனைத் தேடி அலைகின்றது.......?
 மின்மினிப் பூச்சி !

இசை

இசை

இசையேதான் என்மூச்சு இசையேதான் என்பேச்சு

இசையேதான் என்னுணவு எப்போதும் -இனியவளே

ஒப்பாரி சங்கொலியும் வேண்டாமே நான்இறந்தால்

அப்போதும் ஏழிசையே ஒது.

Monday, 26 September 2011

தேடு
 நீரிலே எதனைத் தேடுகிறாய் ?  நிழலையா?
 மனதில் தெளிவிருந்தால்தான் சிந்தனைகள் சிறகடிக்கும்.
 குழம்பி விட்ட  குட்டையிலே மீன் பிடிக்க முடியாது.
 நிழல் சிக்குமா என்ன?
 ஆனால்...இது கடல் ....
 வாழ்க்கைக் கடலிலே
 நிழலை தேடாதே! ...
நிஜத்தை மட்டுமே தேடு ! 
                       -மாணவநண்பன். 

அடுத்த பிரசவம்










அடுத்த பிரசவம் 
இவை அனைத்தும்...
நான் வரைந்த ஓவியக் குழந்தைகள்!
கண்ணில் எடுத்து உச்சி முகருங்கள்!
ரசனை எனும் மூச்சுக் காற்றால் வருடுங்கள்!
பின் தெரிவியுங்கள்
உமது கருத்தை!

Saturday, 20 August 2011

சிந்தனை

சிந்தனை  

என்ன பெண்ணே! 
என்ன சிந்தனை?
எதை நினைத்துக் கவலை?
ஓ! Gas விலை ஏறி விட்டதற்கா இப்படி கவலைப் படுகிறாய்? 
     என்ன செய்வது ! 
    கையாலாகாதவர்கள் ஆளும் நாட்டிலே பிறந்துவிட்டு 
     கவலை எதற்கடி படுகின்றாய்?
    உரலுக்குள் தலையை விட்டுவிட்டு 
    உலக்கைக்கு பயப்படுவதா? 
              சிந்தையை விடு.
              புறப்பட்டு! 
              விறகு தேடு;அதற்காக மரங்களை வெட்டாதே!
              நாம் அரசியல் வாதிகளல்ல.நமக்கு அறிவிருக்கிறது.
                            போ! 
                            போய் நன்கு காய்ந்த குச்சிகள் பொறுக்கு!

Friday, 19 August 2011

SITHIRANGAL PESUDHADI

சித்திரங்கள் பேசுதடி...

 
இவை அனைத்தும் என் விரல்கள்
                          பிரசவித்த தூரிகைக் குழந்தைகள்.
       இன்னும் பல சித்திரங்கள் இதுபோல 
                                   பலவுண்டு.....நீங்கள் கண்டு களித்திட...
                     இனிமேல் ஒன்றாய்,பலவாய் அடுத்தடுத்து 
                       பார்வைக்கு விருந்து படைத்திட...
                                   இனிவரும் காலங்களில்...  
என்றும் அன்புடன் ....
                       உங்கள்
                                                                    மாணவ நண்பன்.