Sunday, 30 October 2011


குழலூதி மயக்கும்...

 ராதா சமேத கிருஷ்ணன் !

Saturday, 29 October 2011

என்னதான் வண்ணங்களை வாரியிறைத்து ஓவியம் தீட்டினாலும் பென்சில் ஓவியத்தின்முன் பொலிவிழந்து நிறம் மங்கி விடுகின்றன.பல நேரங்களில் பென்சிலிடம் தூரிகை தோற்றுத்தான் போகிறது!இந்த ஓவியம் போஸ்டர் கலர் பேப்பரில் அப்சரா 2B பென்சில் கொண்டு வரையப்பட்டது !


இந்த ஹனுமானின் சிற்பமும்கூட மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே எடுக்கப்பட்டதுதான்.அற்புதமான வேலைப்பாடு கொண்ட நம் பழங்கால புதையல்களுக்கும் பண்டைத் தமிழர்களின் கலைத் திறமைக்கும் ஆதாரமாய் விளங்கும் இது போன்ற சிற்ப வேலைப்பாடுகளின் பெருமையை உலகம் மென்மேலும் அறியச் செய்வோம்.

Friday, 28 October 2011

மழை

என் வீட்டு சன்னலில் 
நான் பார்க்கும் காட்சிகளை
கண்காணாமல் மறைத்திட 
இயற்கை விரித்திட்ட 
நீர் திரை...
மழை

மழை !

வானத் தாயின்
மெகா தனம் சுரக்கும் 
பூமிக் குழந்தைக்கான 
தாய்ப் பாலூற்று ..
மழை !

மழை

கார்மேகப் பஞ்சுகொண்டு 
காற்று ராட்டை 
நூற்கும் நீரிழை ...
மழை !


Thursday, 27 October 2011

புழுக்கம

   புழுக்கம் 


கண்ணுக்கு எட்டிய தூரம்வரையிலும் 
கார்மேகம் மட்டுமே கவி பாடுகிறது.
கவிதை வரிகளாய் மழையின் தூறல்கள்.
அடிக்கின்ற காற்றிலே 
திசை மாறிய தூறல் 
சாரலாய் வீசுகிறது
சிலிர்க்க வைக்கும் ஈரக்காற்றில் 
சிங்காரமாய்த் தலையசைக்கின்றன 
நீரையுண்ட விருட்சங்கள்.
இலைகள் குடித்த  மிச்ச எச்சிலை
இன்பமாக சுவைக்கின்றன 
மரத்தடிப் புற்கள்.
தான் உண்ட நீர் போக 
சேர்த்துத் தேக்குகிறது பூமி
சிறு சிறு குட்டைகளாய்.
உற்சாகமாய் சிறகுகள் விரித்து 
உடலை நனைத்து ,
நீரைக் குடித்து, 
சிலிர்த்து,உதறி ,மீண்டும் குளித்து
கும்மாளமிடும் காக்கைக் கூட்டம்
குளியல் தந்த உற்சாகத்தில்
கா கா எனக் கரைந்து 
பறந்து செல்கிறது விரைந்து !
வானம் கவிழ்ந்துவிட்டதன் காரணத்தால் 
பூமியெங்கும் அரை வெளிச்சம்...
இருட்டிற்குச் சாம்பல் வண்ணமாய் ...!
உடலை வருடி 
மெல்ல வீசுகிறது ஊதற்காற்று.
பூமியெங்கும் இதமான குளிர்.
வீசும் காற்றில் குளிர்.
மண்ணில் குளிர்.
மழைச் சாரலில் குளிர்.
சாரல் பட்டுத் தெரித்ததால்
உடல் எங்கும் குளிர்.
சாரல் நிறைந்த ஈரக்காற்றை 
உள்ளுககாய் சுவாசித்து,
உள்நிரப்பியதால் நுரையீரலில் குளிர்.
ஒவ்வொரு செல்லிலும் , உயிரிலும் குளிர்.
உன்னைச் சுற்றி 
எல்லாம் குளிர்ந்தும்கூட ,
என் உள்ளமே ...
உனக்குமட்டும் 
வியர்த்து வடிகிறதே ...!
ஏன்...?


                                                       ....மாணவ நண்பன்.

Saturday, 8 October 2011

கமலமலரின் அழைப்பு

கமலமலரின் அழைப்பு 

பாரினில் நீயின்றேல் 
        
        படுத்துவிடும் உயிர்களெல்லாம்

பட்டினிப்போர் மூண்டுவிடும்

        பகலவனே வந்துவிடு!

கடலுமுனைக் காணாது 

       கதறிவிடும் பரிதவித்தே!

காத்திருக்க வைக்காதே

      கதிரவனே வந்துவிடு!

இரவரக்கன் பிடியினிலே 
     
     இதழ்கூம்பி நிற்கின்றேன்;

இப்பொழுதே இக்கணமே 

      இரவியோனே வந்துவிடு!

ஆட்டமிட்ட காதலனும் 

    அடங்கிவிட்டான் என்னுள்ளே!

ஆங்கிவனை சிறைமீட்க 
     
     ஆதித்யா வந்துவிடு!

சுட்டெரிக்கும் வெயில்வேண்டாம் 

      சூடான சுகம்வேண்டும் !

சுடர்முகத்துச் சூத்ரதாரி 

       சூரியனே வந்துவிடு !

                        மாணவ நண்பன் .
                                                           
    

                          





           

Friday, 7 October 2011

காலை வணக்கம்

காலை வணக்கம்
இன்று அதிகாலை 
என்வீட்டுத் தோட்டத்தில் 
பூத்திட்ட புத்தம் புது ரோஜா மலரொன்று
புது மனம் மாறாமல்  
அனைத்து  நண்பர்களுக்கும்
 காலை வணக்கத்தை
தெரிவித்துக் கொள்கின்றது !
                            

Monday, 3 October 2011

வீக்கம்

வீக்கம்
கதவிடுக்கில் கை வைத்து
விரல்கள்    நசுங்கி
 வீரென்று  அலறினாய்
ஆனால் வீங்கிப்போனது...
எனது விரல்கள்!
உதிரம் வழிந்தது
என் விழிகளில்...
வலியுணர்வு என் மனதில்
காரணம் தெரியாமல்
தவித்தேன் நான்!
ஆனால் நீ ,
விழி மலர்ந்து 
எனைப் பார்த்தாய்!
நான் உணர்ந்தேன் அதன்பின்னர் ...
உன்னுடலில் என்னிருப்பும் 
என்னுடலில் உன்னிருப்பும் ! 

மேகக் கூட்டங்கள்

மேகக் கூட்டங்கள்

வானம் எனும் காகிதத்தில்
வினாடிக்கு வினாடி 
உருவம் மாறும் நவீன ஓவியங்கள்.... 
மேகக் கூட்டங்கள்! 

மின்மினிப் பூச்சி

மின்மினிப் பூச்சி 

 பின்புறத்தில்
 விளக்கினைப் பிடித்துக்கொண்டு 
 எதனைத் தேடி அலைகின்றது.......?
 மின்மினிப் பூச்சி !

இசை

இசை

இசையேதான் என்மூச்சு இசையேதான் என்பேச்சு

இசையேதான் என்னுணவு எப்போதும் -இனியவளே

ஒப்பாரி சங்கொலியும் வேண்டாமே நான்இறந்தால்

அப்போதும் ஏழிசையே ஒது.