இது சித்திரங்கள் சிரிக்கும் மலர் . கவிதைகள் பூக்கும் மலர் . சிந்தையில் உதித்திடும் சொல்பூக்களை தொடுத்து மாலையாக்கி , ரசனை மிகு மக்களுக்கு சூட்டி மனம் மகிழ வாசம் வீசும் மலர். நுகருங்கள் மலரிதனை. நவிலுங்கள் நும் கருத்தை.
Sunday, 30 October 2011
Friday, 28 October 2011
Thursday, 27 October 2011
புழுக்கம
புழுக்கம்
கண்ணுக்கு எட்டிய தூரம்வரையிலும்
கார்மேகம் மட்டுமே கவி பாடுகிறது.
கவிதை வரிகளாய் மழையின் தூறல்கள்.
அடிக்கின்ற காற்றிலே
திசை மாறிய தூறல்
சாரலாய் வீசுகிறது
சிலிர்க்க வைக்கும் ஈரக்காற்றில்
சிங்காரமாய்த் தலையசைக்கின்றன
நீரையுண்ட விருட்சங்கள்.
இலைகள் குடித்த மிச்ச எச்சிலை
இன்பமாக சுவைக்கின்றன
மரத்தடிப் புற்கள்.
தான் உண்ட நீர் போக
சேர்த்துத் தேக்குகிறது பூமி
சிறு சிறு குட்டைகளாய்.
உற்சாகமாய் சிறகுகள் விரித்து
உடலை நனைத்து ,
நீரைக் குடித்து,
சிலிர்த்து,உதறி ,மீண்டும் குளித்து
கும்மாளமிடும் காக்கைக் கூட்டம்
குளியல் தந்த உற்சாகத்தில்
கா கா எனக் கரைந்து
பறந்து செல்கிறது விரைந்து !
வானம் கவிழ்ந்துவிட்டதன் காரணத்தால்
பூமியெங்கும் அரை வெளிச்சம்...
இருட்டிற்குச் சாம்பல் வண்ணமாய் ...!
உடலை வருடி
மெல்ல வீசுகிறது ஊதற்காற்று.
பூமியெங்கும் இதமான குளிர்.
வீசும் காற்றில் குளிர்.
மண்ணில் குளிர்.
மழைச் சாரலில் குளிர்.
சாரல் பட்டுத் தெரித்ததால்
உடல் எங்கும் குளிர்.
சாரல் நிறைந்த ஈரக்காற்றை
உள்ளுககாய் சுவாசித்து,
உள்நிரப்பியதால் நுரையீரலில் குளிர்.
ஒவ்வொரு செல்லிலும் , உயிரிலும் குளிர்.
உன்னைச் சுற்றி
எல்லாம் குளிர்ந்தும்கூட ,
என் உள்ளமே ...
உனக்குமட்டும்
வியர்த்து வடிகிறதே ...!
ஏன்...?
....மாணவ நண்பன்.
சிங்காரமாய்த் தலையசைக்கின்றன
நீரையுண்ட விருட்சங்கள்.
இலைகள் குடித்த மிச்ச எச்சிலை
இன்பமாக சுவைக்கின்றன
மரத்தடிப் புற்கள்.
தான் உண்ட நீர் போக
சேர்த்துத் தேக்குகிறது பூமி
சிறு சிறு குட்டைகளாய்.
உற்சாகமாய் சிறகுகள் விரித்து
உடலை நனைத்து ,
நீரைக் குடித்து,
சிலிர்த்து,உதறி ,மீண்டும் குளித்து
கும்மாளமிடும் காக்கைக் கூட்டம்
குளியல் தந்த உற்சாகத்தில்
கா கா எனக் கரைந்து
பறந்து செல்கிறது விரைந்து !
வானம் கவிழ்ந்துவிட்டதன் காரணத்தால்
பூமியெங்கும் அரை வெளிச்சம்...
இருட்டிற்குச் சாம்பல் வண்ணமாய் ...!
உடலை வருடி
மெல்ல வீசுகிறது ஊதற்காற்று.
பூமியெங்கும் இதமான குளிர்.
வீசும் காற்றில் குளிர்.
மண்ணில் குளிர்.
மழைச் சாரலில் குளிர்.
சாரல் பட்டுத் தெரித்ததால்
உடல் எங்கும் குளிர்.
சாரல் நிறைந்த ஈரக்காற்றை
உள்ளுககாய் சுவாசித்து,
உள்நிரப்பியதால் நுரையீரலில் குளிர்.
ஒவ்வொரு செல்லிலும் , உயிரிலும் குளிர்.
உன்னைச் சுற்றி
எல்லாம் குளிர்ந்தும்கூட ,
என் உள்ளமே ...
உனக்குமட்டும்
வியர்த்து வடிகிறதே ...!
ஏன்...?
....மாணவ நண்பன்.
Saturday, 8 October 2011
கமலமலரின் அழைப்பு
கமலமலரின் அழைப்பு
பாரினில் நீயின்றேல்
படுத்துவிடும் உயிர்களெல்லாம்
பட்டினிப்போர் மூண்டுவிடும்
பகலவனே வந்துவிடு!
கடலுமுனைக் காணாது
கதறிவிடும் பரிதவித்தே!
காத்திருக்க வைக்காதே
கதிரவனே வந்துவிடு!
இரவரக்கன் பிடியினிலே
இதழ்கூம்பி நிற்கின்றேன்;
இப்பொழுதே இக்கணமே
இரவியோனே வந்துவிடு!
ஆட்டமிட்ட காதலனும்
அடங்கிவிட்டான் என்னுள்ளே!
ஆங்கிவனை சிறைமீட்க
ஆதித்யா வந்துவிடு!
சுட்டெரிக்கும் வெயில்வேண்டாம்
சூடான சுகம்வேண்டும் !
சுடர்முகத்துச் சூத்ரதாரி
சூரியனே வந்துவிடு !
மாணவ நண்பன் .
Friday, 7 October 2011
Monday, 3 October 2011
வீக்கம்
வீக்கம்
கதவிடுக்கில் கை வைத்து
விரல்கள் நசுங்கி
வீரென்று அலறினாய்
ஆனால் வீங்கிப்போனது...
எனது விரல்கள்!
உதிரம் வழிந்தது
என் விழிகளில்...
வலியுணர்வு என் மனதில்
காரணம் தெரியாமல்
தவித்தேன் நான்!
ஆனால் நீ ,
விழி மலர்ந்து
எனைப் பார்த்தாய்!
நான் உணர்ந்தேன் அதன்பின்னர் ...
உன்னுடலில் என்னிருப்பும்
என்னுடலில் உன்னிருப்பும் !
மேகக் கூட்டங்கள்
மேகக் கூட்டங்கள்
வானம் எனும் காகிதத்தில்
வினாடிக்கு வினாடி
உருவம் மாறும் நவீன ஓவியங்கள்....
மேகக் கூட்டங்கள்!
மின்மினிப் பூச்சி
மின்மினிப் பூச்சி
பின்புறத்தில்
விளக்கினைப் பிடித்துக்கொண்டு
எதனைத் தேடி அலைகின்றது.......?
மின்மினிப் பூச்சி !
இசை
இசை
இசையேதான் என்மூச்சு இசையேதான் என்பேச்சு
இசையேதான் என்னுணவு எப்போதும் -இனியவளே
ஒப்பாரி சங்கொலியும் வேண்டாமே நான்இறந்தால்
அப்போதும் ஏழிசையே ஒது.
Subscribe to:
Posts (Atom)




