Friday, 18 November 2011

காலப் பெருவெளி

காலப் பெருவெளி 
உலகம் ஊமையாகிப் போனது. 
காற்றும் உறைந்தது.
மரங்கள் ஜடமாயின  
ஆதவனும் நடுவானில் அசையாமல் நின்றுவிட்டான்.
கடிகார முள் கூட நிலையாக அசையாமல் ,
காலம் கூடக் கட்டுண்டுபோனது.
அய்யோ...!
இது என்ன? பூமியும் சுற்ற வில்லை...
புவி ஈர்ப்பு விசையுமில்லை...
விசிறிஎறியப்பட்ட உயிர்கள் அத்தனையும் 
ஆகாயப் பெருவெளியில் ...
அலறல்கள் வான்முட்டிக் 
கரைகின்றன மெது மெதுவாய் ...
அதிசயமாய் இருவர்மட்டும் 
பூமியிலே தனியாக ....
அடடா...!
அது யார் ? 
நாமா?
போதும் என் கண்ணே! 
என் விழியும் உன் விழியும் 
முதன் முதலாய் சந்தித்த நொடிப் பொழுதில் 
இப்படித்தான் உணர்ந்தேன் நான்!
அன்பே....!
நம் இரு விழிகள் கலந்ததற்கே இப்படியா?
ஒருவேளை நம் ஈருடலும் ஓருயிராய் கலந்துவிட்டால்....?
இந்தப் பெரு அண்டம் முற்றிலுமே 
வெடித்தல்லவா சிதறிவிடும்..!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ...!
நாம்...
நம் காதல்...
நம் உறவு ...
நம் உணர்வு ...
இவையனைத்தும் 
காலப்பெருவெளிகள் தாண்டியும் 
விரிந்து சென்று கொண்டே...









No comments:

Post a Comment