கமலமலரின் அழைப்பு
பாரினில் நீயின்றேல்
படுத்துவிடும் உயிர்களெல்லாம்
பட்டினிப்போர் மூண்டுவிடும்
பகலவனே வந்துவிடு!
கடலுமுனைக் காணாது
கதறிவிடும் பரிதவித்தே!
காத்திருக்க வைக்காதே
கதிரவனே வந்துவிடு!
இரவரக்கன் பிடியினிலே
இதழ்கூம்பி நிற்கின்றேன்;
இப்பொழுதே இக்கணமே
இரவியோனே வந்துவிடு!
ஆட்டமிட்ட காதலனும்
அடங்கிவிட்டான் என்னுள்ளே!
ஆங்கிவனை சிறைமீட்க
ஆதித்யா வந்துவிடு!
சுட்டெரிக்கும் வெயில்வேண்டாம்
சூடான சுகம்வேண்டும் !
சுடர்முகத்துச் சூத்ரதாரி
சூரியனே வந்துவிடு !
மாணவ நண்பன் .

No comments:
Post a Comment