Wednesday, 8 October 2014

மழலை ரோஜா


கொழு கொழு கன்னம் 

குமிழ்ந்த முகவாய் 

ரோஜா உதடு 

மயக்கும் புன்னகை 

திராட்சைக் கண்கள் 

குறும்புப் பார்வை 

கரு கரு கூந்தல் 

கூட்டிப் பார்த்தால் 

மழலை ரோஜா 







சாதாரண வெள்ளை அட்டையில் நீர்வர்ணம் கொண்டு தீட்டியது 



Tuesday, 23 September 2014

அர்த்தநாரீஸ்வரர்












அர்த்தநாரீஸ்வரர்



கரு நிறக் காகிதத்தில் 
ஆயில் பேஸ்டல் கொண்டு 
பஞ்ச உலோக சிற்பத்தில்  
ஆரஞ்சு மஞ்சள் வண்ணம் ஒருபுறமும் 
பச்சை வண்ணம் மறுபுறமும் விழும் 
தோற்றத்தில் வரைந்து முடிக்கப் பட்ட 
இவ்வோவியம் இருபது வயதையும் தாண்டிவிட்டது 
இன்னும் மெருகு குலையாமல் 
உங்கள் பார்வைக்கு 
மீண்டும் ஒரு பதிவாக










Wednesday, 3 September 2014

எதிரி

 என் எண்ணங்களே 
 என் முதல் எதிரி.
 ஆம்!
 என்னதான் கடிவாளமிட்டு 
 கம்பால் அடித்தாலும்,
 எதிர்காலத்திற்கு 
 என்னை செல்லவொட்டாமல்,
 நிகழ் காலத்துக்கும் மீளாமல்
 நான் கசந்து வெறுத்துவிட்ட
 என் கடந்த காலத்திற்கே 
 என்னை இழுத்துச் செல்லும் 
 என் மனக்குதிரையை  
 என் எதிரி என்று சொல்லாமல் 
 வேறென்ன சொல்ல?

Monday, 25 August 2014

மயக்கும் புன்னகை



















மயக்கும் புன்னகை 

அழகாய்ச்  சிரிக்கும் அற்புதச் சிறுவன் .

நீர்வர்ணம் தனில் தூரிகை தோய்த்தே 

கை முறைத்  தாளில் களிப்புடன் வரைந்தேன் 

தங்கக் கூந்தல் முன் நெற்றியில் புரள 

நீல விழிகளில் குறும்பு மின்ன 

ரோஜாக் கன்னம் நாணம் காட்ட 

செவ்விதழ் விரிந்து முத்துகள் தெரிய

தன் அற்புதப் புன்னகை கொண்டு நம்முள்ளம் மயக்கும் 

உள்ளம்கவரும் கள்வனை வரைந்தேன்

கண்டோர் புகழ நெஞ்சு நிறைந்தேன்.
    








Sunday, 24 August 2014

நீர்க்குடம் ஏந்தும் பாற்குடம்

நீர்க்குடம் ஏந்தும் பாற்குடம்

தண்ணீர் கொண்டு செல்வதற்காக பானை சுமந்து வந்த பெண் பொய்கையிலே நீராடி முடித்த கையேடு தான் அணிந்த ஒற்றை வெண்ணிற ஆடை ஈரம் கொண்ட மேனியிலே ஒட்டியும் ஒட்டாமலும் ,பட்டும் படாமலும் அவள் மேனியழகை இலை  மறை காயாய்  மறைத்தும் மறைக்காமலும் வெளிப் படுத்தும் காட்சி... அடடா... !
ரசித்து ரசித்து வரைந்த இவ்வோவியம் ....!
அவள் காங்களில் பாருங்கள்...குறும்பின் மின்னல்...
இதழ்களில் ..ஒய்யாரக் குறுநகை....!
கன்னங்களில் வெட்கச் செந்தூரம்.....!
காமக் கண்ணோடு பாராமல் கலைக் கண்ணோடு பாருங்கள்...!
எனக்கு மட்டுமல்ல ...! 
என் தாயாருக்கும் கூட நான் கஷ்டப்பட்டு.. இல்லை... இல்லை...!
நான் இஷ்டப்பட்டு வரைந்த இவ்வோவியம் ...மிக மிக பிடிக்குமாம் ...! 

Tuesday, 19 August 2014

நீராடும் தாமரை





நீராடும் தாமரை 

இதுவும் நான் ஆரம்ப காலங்களில் வரைந்த ஓவியங்களுள் 

எனக்கு மட்டுமல்ல ...என் உறவினர்களுக்கும் ...

மிகப் பிடித்தமான ஓவியம்.

நீர் வர்ணம் கொண்டு தீட்டப்பட்டது...

செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா என்ற 

சசிரேகாவின் தேன் குரல் பாடலும் 

நடிகை நிரோஷாவும் பிரபலமான நேரம் ....

எனது கற்பனையில் தீட்டிய ஓவியம்....

நடிகை நிறோஷாவின் சாயலும் இருப்பதாகக்  கூறுவார்கள்.

அப்படி ஏதாவது தெரிகிறதா பாருங்கள்...!

கோதண்ட ராமன்

கோதண்ட ராமன் ...
     
 நான் தீட்டிய ஓவியங்களுள் ரசித்து தீட்டிய ஓவியம்.....
      
மிகவும் பிடித்த ஓவியங்களுள் ஒன்று.....
             
 கை முறைதாளில் நீர் வர்ணம் கொண்டு தீட்டியது.
                     
எனது 19 ஆம் வயதில் (1988) வரைந்தது ....
                           
எனக்கு பல பாராட்டுகளை வரிக்குவித்த படம்.

வண்ணங்களை பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல் 

நானே சுயமாய் தீட்டியது ....

இந்த முத்து தீட்டிய முத்துராமனை 

சீதைக்குப் பிடிக்கிறதோ இல்லையோ ...

முத்துக்குமரனாகிய எனக்கு மிகவும் பிடிக்கும்.