சிந்தனை
என்ன பெண்ணே!
என்ன சிந்தனை?
எதை நினைத்துக் கவலை?
ஓ! Gas விலை ஏறி விட்டதற்கா இப்படி கவலைப் படுகிறாய்?
என்ன செய்வது !
கையாலாகாதவர்கள் ஆளும் நாட்டிலே பிறந்துவிட்டு
கவலை எதற்கடி படுகின்றாய்?
உரலுக்குள் தலையை விட்டுவிட்டு
உலக்கைக்கு பயப்படுவதா?
சிந்தையை விடு.
புறப்பட்டு!
விறகு தேடு;அதற்காக மரங்களை வெட்டாதே!
நாம் அரசியல் வாதிகளல்ல.நமக்கு அறிவிருக்கிறது.
போ!
போய் நன்கு காய்ந்த குச்சிகள் பொறுக்கு!



