முத்திரை.
இசை, நடனம், ஓவியம்
ஆகிய மூன்றினையும் ஒன்றிணைத்து
முதன்முதலாய் ஒரு அரங்கேற்றம்
காகித மேடையில் நர்த்தனமாடுகின்றன
விரல்கள்...
பாரதி என்றொரு காவியம் ...
ஓவியமாய்ப் பிறக்கிறது!
இது ஓவியக் கலையில் புதியதொரு முயற்சி
பரதத்தில் கைகள் பிடிப்பது முத்திரை
இசை ஓவியம்தனில்
உம் விரல்கள் படைத்தன தனி முத்திரை.
முத்திரை படைத்த சிற்பியே...! ஜெயராமரே...!
வாழ்க நீவிர்!
இது தவிலின் இசைக்கேற்றவாறு தனது கரங்களையும், விரல்களையும் நடனம் ஆடுகின்ற லாவகத்தோடு அசைத்து ஒரு சார்க்கோல் (கரித்துண்டு)கொண்டு மகா கவி பாரதி எனும் அற்புத ஓவியத்தை படைத்த சிற்பி ஜெயராமன் (பாண்டிச்சேரி பாரதியார் கவின் கலைக் கல்லூரியின் முதல்வர்)அவர்களைக் கண்டு வியந்துபோன என் உள்ளம் பாடிய கவிதை.
இசை, நடனம், ஓவியம்
ஆகிய மூன்றினையும் ஒன்றிணைத்து
முதன்முதலாய் ஒரு அரங்கேற்றம்
காகித மேடையில் நர்த்தனமாடுகின்றன
விரல்கள்...
பாரதி என்றொரு காவியம் ...
ஓவியமாய்ப் பிறக்கிறது!
இது ஓவியக் கலையில் புதியதொரு முயற்சி
பரதத்தில் கைகள் பிடிப்பது முத்திரை
இசை ஓவியம்தனில்
உம் விரல்கள் படைத்தன தனி முத்திரை.
முத்திரை படைத்த சிற்பியே...! ஜெயராமரே...!
வாழ்க நீவிர்!
இது தவிலின் இசைக்கேற்றவாறு தனது கரங்களையும், விரல்களையும் நடனம் ஆடுகின்ற லாவகத்தோடு அசைத்து ஒரு சார்க்கோல் (கரித்துண்டு)கொண்டு மகா கவி பாரதி எனும் அற்புத ஓவியத்தை படைத்த சிற்பி ஜெயராமன் (பாண்டிச்சேரி பாரதியார் கவின் கலைக் கல்லூரியின் முதல்வர்)அவர்களைக் கண்டு வியந்துபோன என் உள்ளம் பாடிய கவிதை.
No comments:
Post a Comment