Tuesday, 23 September 2014

அர்த்தநாரீஸ்வரர்












அர்த்தநாரீஸ்வரர்



கரு நிறக் காகிதத்தில் 
ஆயில் பேஸ்டல் கொண்டு 
பஞ்ச உலோக சிற்பத்தில்  
ஆரஞ்சு மஞ்சள் வண்ணம் ஒருபுறமும் 
பச்சை வண்ணம் மறுபுறமும் விழும் 
தோற்றத்தில் வரைந்து முடிக்கப் பட்ட 
இவ்வோவியம் இருபது வயதையும் தாண்டிவிட்டது 
இன்னும் மெருகு குலையாமல் 
உங்கள் பார்வைக்கு 
மீண்டும் ஒரு பதிவாக










Wednesday, 3 September 2014

எதிரி

 என் எண்ணங்களே 
 என் முதல் எதிரி.
 ஆம்!
 என்னதான் கடிவாளமிட்டு 
 கம்பால் அடித்தாலும்,
 எதிர்காலத்திற்கு 
 என்னை செல்லவொட்டாமல்,
 நிகழ் காலத்துக்கும் மீளாமல்
 நான் கசந்து வெறுத்துவிட்ட
 என் கடந்த காலத்திற்கே 
 என்னை இழுத்துச் செல்லும் 
 என் மனக்குதிரையை  
 என் எதிரி என்று சொல்லாமல் 
 வேறென்ன சொல்ல?