நிலவில்லா நீள் நெடுவானம்
வெறிச்சோடி இருப்பதைப் போல
நீயில்லா நாட்களில்
வெறுமையாகிப் போகிறது
என் வாழ்க்கை !
சிறு புன்னகை தவழும்
உன் பூமுகம் காணாப் பொழுதுகளில்
சிறகொடிந்து போகிறது
என் கற்பனைப் பறவை !
உன் காந்தக் கண்களில்
நான் தொலைந்து போன நாள் முதலாய்
தன் கனவுகளைத் தொலைக்கின்றன
என் உறக்க நேரங்கள் !
வருகிறேன் எனச் சொல்லி
வாராமல் போன காலம் ...
காத்திருத்தளிலேயே நீண்டுபோயின
என் நெடிய பொழுதுகள் !
உன்பிரிவு தாங்காமல்
புழுங்கி மனம் தவிக்கையிலே
பனி நீரில் குளித்துவிட்ட புது ரோஜா பூவுக்கும்
வியர்த்து வடிவதாய்த்தான்
எனக்குத் தோணுதடி !
இனி ஒருபொழுதும்
எனை நெருங்க மாட்டாய் நீ
என அறிந்த நாள் முதலாய்
என் பட்டப் பகலனைத்தும்
நட்டநடுநிசியைப் போல்
இருட்டாகிப் போகுதடி!
No comments:
Post a Comment