Wednesday, 8 February 2012

மலடியின் தாலாட்டு


மலடியின் தாலாட்டு 

வாவாஎன் கண்மணியே 
      வந்தாடும் கட்டழகே !
வாராது வந்துநின்ற 
      வடிவழகுப் பெட்டகமே !

உந்தை எனக்களித்த 
       மணவாழ்வுப் பரிசான 
சந்தனப் பேழையடா
       சதிராடி வந்திடடா!

பொக்கைவாய்ச் சிரிப்பினிலே
       பறிகொடுத்த என்னுள்ளம் 
தக்கையாகிப் பறக்குதடா 
       தாவித்தாவிக் குதிக்குதடா !

மலடி மலடிஎன 
       இவ்வுலகம் எனையழைக்க
வலம்புரிச் சங்கென நீ 
        வந்துவிட்டாய் கலிதீர்க்க!

உன்னைப் பிரிந்தாலோ 
        உறங்காது என்னுள்ளம் 
கண்ணிமையை மூடாது 
        காத்திடுவேன் வா வாவா !  








    

No comments:

Post a Comment