சுந்தரர்க்கு திருவடி சூட்டிய கதை ... படிக்க நீங்க ரெடியா?
சுந்தரர் ஒரு நாள் மாலை நேரம்.. திருத்துறையூரில் கோயில் கொண்டிருந்த சிஷ்ட குருநாதரை தரிசித்து, பின்னர் அங்கிருந்து அட்ட வீரட்டானத் தலங்களுள் ஒன்றான திருஅதிகை வீரட்டானம் கோயில் கொண்ட ஈசனை தரிசிக்க நினைத்து தற்போது புதுப்பேட்டை என்று அழைக்கப் படும் ரோஜபுரியின் வழியாக பயணம் மேற்கொண்டார். ஆனால் ,திரு நாவுக்கரசர் என்று அறியப்படும் அப்பர் பெருமானார் உழவாரத் திருப்பணி செய்து வரும் அந்த தலத்தை தம் கால்களால் தீண்டலாகாது என்று கருதினார்.எனவே ரோஜாபுரியை அடுத்துள்ள கேடிலம்பாக்கம் என்ற சிற்றூரில் உள்ள சித்தவடமடம் என்கின்ற வழிப் போக்கர் தங்கும் சத்திரத்தில் தங்கிச் செல்ல நினைத்தார். இரவு உணவுக்குப் பிறகு தெருவில் உள்ள திண்ணையில் படுத்து உறங்கினார் .அப்போது..
திண்ணையிலே உறங்கிக் கொண்டிருந்த சுந்தரரின் தலையிலே ஏதோ பட்டதைப் போலிருந்தது . கண் விழித்துப் பார்த்தபோது அவரது தலையிலே கால் படுமாறு ஒரு வயதான மனிதர் படுத்திருந்தார்!பாவம் பெரியவர் தூக்கத்திலே தெரியாமல் கால் பட்டிருக்கிறது என்று நினைத்து சற்று தள்ளிப் பொய் படுத்துக் கொண்டார் ! .மீண்டும் உறங்கிப் போனார். .
சிறிது நேரம் கடந்திருக்கும்.மீண்டும் அவரது தலையிலே மீண்டும் ஏதோ குறு குறு ப்பதைப் போல ஒரு உணர்வு .கண் விழித்துப் பார்த்தால் ... மீண்டும் அதே பெரியவர் .சற்றே அலுப்புடன் நகர்ந்து அடுத்த திண்ணையில் சென்று படுத்தார் சுந்தரர் நெடுந்தூரம் நடந்த பயணக் களைப்பிலே மீண்டும் கண்கள் சொருக உறங்கிப் போனார்.
ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் தலையிலே ஏதோ ஒரு உணர்வு . கண்விழித்துப் பார்த்தால் மீண்டும் அதே பெரியவர் இந்தத் திண்ணையிலும். வந்ததே சுந்தரருக்குக் கோபம். அந்தப் பெரியவரைப் பார்த்து,"யாரையா கிழவரே நீர் ? என்னை நிம்மதியாய் உறங்கவிடாமல் இப்படிப் படுத்தி எடுக்கின்றீரே ! யார் நீர்? "என்று வினவினார் . அதற்கு அந்தப் பெரியவர் ," என்னைத் தெரியவில்லையா ?"என்று கேட்டு சற்றே உட்புறமாக நோக்கிச் சென்று மறைந்தார்
.அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் தன மனையாள் உமையவளோடு சிவபெருமான் காட்சியளிக்க ,பரவசப் பட்டுப் போன சுந்தரர் 'தம்மானை அறியாத சாதியருளரோ...'எனத் துவங்கும் பதிகத்தைப் பாடினார் .திருவதிகை இறைவனைநினைந்துபாடியஅப்பதிகத்தைஇங்குவைத்துப்பாடியமையால் இது வைப்புத் தலமாகும்.
இறைவன் காட்சி தந்த இடமே தற்போதைய மூலஸ்தானம் என்று அழைக்கப் படும் கருவறை ஆகும் .இவ்வாறு சுந்தரருக்கு தமது இறைவன் தமது திருவடி சூட்டிய தலமாகியசித்தவடமடத்தின் பெருமைகளையும் கோவில் அமைப்பையும் அடுத்த முறை பார்ப்போமே!
தொடரும்....
No comments:
Post a Comment