Tuesday, 17 April 2012

முக நூல் காதலி ...

முக நூல் காதலி ...




உனது   மனமென்னும் FACE  BOOK  ல் 
சைன் அப் நான் செய்திடவே துடிக்கின்றேன்!
பெயர்  ,பிறந்த நாளுடன் கேட்டுவிட்ட விபரங்கள் 
அனைத்தும் நான் கொடுத்துவிட்டேன்!
குழப்பியடிக்கின்ற வார்த்தைகள் டைப் செய்தே
சப்மிட் நான் செய்து விட்டேன் ....
 பாஸ் வேர்டாய் என்னுயிரை 
தயங்காமல் தந்துவிட்டேன் ...!
அப்போது தெரியாது ஒவொரு முறையும்
 நான் சைன் இன் செய்தாலும் 
 பாஸ் வேர்டை நீ கேட்டு வாங்கிடுவாய் என்று ...! 
என் மனதில் தோன்றுகின்ற 
கொஞ்சு மொழி அனைத்தும் நான்   
டைப் செய்து போஸ்ட் செய்தால் 
வேஸ்டாகிப் போகுதடி ...போஸ்டாக மறுக்குதடி...!
இருந்தாலும் எனக்கிங்கே இடையிடையே ஓர் மகிழ்ச்சி!
உன்தங்கை எனக்காய்தான் FRIEND REQUEST கொடுக்கின்றாள்...
அக்செப்ட் நான் செய்திடவா ...?NOT NOW ஐ க்ளிக்கிடவா ...?
என் ஆசைகள் அத்தனையும் ஆல்பமாக்கப் பார்க்கின்றேன்...!
அப்லோடே ஆகாமல் அடம் அடமாய்ப் பிடிக்குதடி!
என் மன WALL ல் நான் செய்த போஸ்டெல்லாம் 
உன் WALL ல் ஷேர் செய்யும் வேளையிலே 
நெட் கனெக்ஷன் கட்டாகி என் கழுத்தை அறுக்குதடி..!
உனக்காக என் அக்கவுண்டில் PAGES பல துவங்கிவிட்டேன்...!
க்ரூப்ஸ் பலதும் துவங்கிவிட்டேன்! 
உன் பதிலைப் பெறுவதற்காய் NOTIFICATION ஐகானை 
அடிக்கடி நான் முறைத்து ஏமாந்து போகின்றேன்...!
வருகின்ற NEWS  FEED உன் போஸ்டைத் தவிர நிதம் 
தொண்ணூறு போஸ்ட் வந்தே துவம்சம் எனைப் பண்ணுதடி..!
புன்னகை ததும்பும் உன் புகைப் படம் ஒன்றை நீ 
அட்டாச்மெண்ட் செய்திட்ட மெசேஜ் உடனே அனுப்பிவிடு...!
 அடியே...நீ அதுவுந்தான் செய்ய மறுத்துவிட்டால் ...
பாஸ் வேர்டை மறந்துவிட்டே LOG  OUT நான் செய்திடுவேன்!  




No comments:

Post a Comment