Monday, 3 October 2011

வீக்கம்

வீக்கம்
கதவிடுக்கில் கை வைத்து
விரல்கள்    நசுங்கி
 வீரென்று  அலறினாய்
ஆனால் வீங்கிப்போனது...
எனது விரல்கள்!
உதிரம் வழிந்தது
என் விழிகளில்...
வலியுணர்வு என் மனதில்
காரணம் தெரியாமல்
தவித்தேன் நான்!
ஆனால் நீ ,
விழி மலர்ந்து 
எனைப் பார்த்தாய்!
நான் உணர்ந்தேன் அதன்பின்னர் ...
உன்னுடலில் என்னிருப்பும் 
என்னுடலில் உன்னிருப்பும் ! 

No comments:

Post a Comment