வீக்கம்
கதவிடுக்கில் கை வைத்து
விரல்கள் நசுங்கி
வீரென்று அலறினாய்
ஆனால் வீங்கிப்போனது...
எனது விரல்கள்!
உதிரம் வழிந்தது
என் விழிகளில்...
வலியுணர்வு என் மனதில்
காரணம் தெரியாமல்
தவித்தேன் நான்!
ஆனால் நீ ,
விழி மலர்ந்து
எனைப் பார்த்தாய்!
நான் உணர்ந்தேன் அதன்பின்னர் ...
உன்னுடலில் என்னிருப்பும்
என்னுடலில் உன்னிருப்பும் !
No comments:
Post a Comment